நாம் தமிழர் கட்சி – உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி திருமுக்கூடல் கிளைத் தலைவர் அன்புத்தம்பி சக்திவேல் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும்
நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக் கொண்டு களப்பணியாற்றி வந்த அன்புத்தம்பி சக்திவேல் அவர்கள் நம்மைவிட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
அன்புத்தம்பி சக்திவேல் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கின்றேன்.
தம்பி சக்திவேல் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்!




