முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…

0

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

மாவீரர் நாள்!

விதையாய் விழுந்த தமிழ் மறவரின் வாழ்க்கையே நமது வரலாறு. அந்த மாவீரத் தெய்வங்களைப் போற்றுகிற ஒரு புனித நாள்!

 27.11.2025 வியாழக்கிழமை மாலை சரியாக 04 மணிக்கு ஆவுடைப்பொய்கை காரைக்குடி.

மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்! மாவீரர்களின் ஈகத்தைப் போற்றுவோம்!

எனது அன்புச் சொந்தங்களே, ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பெருநிகழ்விலும் எங்களுக்கு ஏற்படுகின்ற பொருளாதார நெருக்கடியில் இருந்து நீங்கள் தான் உதவி செய்து எங்களை கரையேற்றி இருக்கிறீர்கள். இம்முறையும் திரள்நிதித் திரட்சியின் வாயிலாக உங்களால் இயன்ற நிதிப் பங்களிப்பைச் செய்து உங்கள் பிள்ளைகள் எங்களை வலிமைப்படுத்த வேண்டும் என்ற அன்போடு வேண்டுகிறேன்.

நன்றி!
வணக்கம்!
நாம் தமிழர்!

https://t.co/i9AjBJY0Ph

Exit mobile version