க.எண்: 2025110974
நாள்: 13.11.2025
அறிவிப்பு:
| ஆதி நீயே! ஆழித் தாயே!
நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை நடத்தும் கடலம்மா மாநாடு உணர்வின் உரை: நாள்: இடம்:
|
நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை சார்பாக ஆதி நீயே! ஆழித் தாயே! என்ற முழக்கத்தை முன்வைத்து, வருகின்ற கார்த்திகை 5ஆம் நாள் 21-11-2025 அன்று மாலை 04 மணியளவில், திருநெல்வேலி மாவட்டம், கூத்தன்குழி முதன்மை சாலையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் கடலம்மா மாநாடு பேரெழுச்சியாக நடைபெறவிருக்கிறது.
இம்மாபெரும் மாநாட்டில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி



