தலைமை அறிவிப்பு – செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் – புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை கலந்தாய்வு

8

க.எண்: 2025110973

நாள்: 12.11.2025

முக்கிய அறிவிப்பு:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், கார்த்திகை 11ஆம் நாள் 27-11-2025
மாலை 04 மணியளவில் காரைக்குடியில் நடைபெறவிருக்கும் மாவீரர் நாள் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் மற்றும் களப்பணிகளைத் திட்டமிடுதல் பொருட்டு, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ஒருங்கிணைந்த புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாவீரர் நாள் பொதுக்கூட்ட ஒருங்கிணைப்பாளர்கள் குழு முன்னிலையில் ஐப்பசி 30ஆம் நாள் 16-11-2025 மாலை 04 மணியளவில் காரைக்குடி தேவேந்திர மஹால் புதிய பேருந்து நிலையம் அருகில்நடைபெறவிருக்கிறது.

 

இக்கலந்தாய்வுக்கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

 

 

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி