நாம் தமிழர் கட்சி – திருவள்ளூர் மாவட்டம், ஆவடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த செந்தமிழர் பாசறை ஓமன் மசுகட் மண்டலத் தலைவர் அன்புத்தம்பி கோபிநாத் அவர்களின் பெரிய தந்தை ஐயா மு.மாரிமுத்து அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
பெரியதந்தையை இழந்து வாடும் தம்பி கோபிநாத் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா மு.மாரிமுத்து அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




