நாம் தமிழர் கட்சி – திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தங்கை பொறியாளர் ப.நிரஞ்சனா அவர்களின் தகப்பனாரும், திண்டுக்கல் தொகுதியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி க.சரவணகுமார் அவர்களின் மாமனாருமான மதிப்பிற்குரிய ஐயா வை.பழனிவேல் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர் அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும் தங்கை ப.நிரஞ்சனா, தம்பி க.சரவணகுமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா வை.பழனிவேல் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




