தலைமை அறிவிப்பு – தெய்வத்திருமகன் நமது தாத்தா முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் மலர்வணக்க நிகழ்வு

5

க.எண்: 2025100936

நாள்: 24.10.2025

அறிவிப்பு:

தெய்வத்திருமகன்

தெய்வத்திருமகன் நமது தாத்தா

முத்துராமலிங்கத்தேவர்
நினைவிடத்தில் மலர்வணக்க நிகழ்வு
தலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி

நாள்: ஐப்பசி 13 | 30-10-2025 காலை 10 மணியளவில்

இடம்: பசும்பொன் நினைவிடம்
இராமநாதபுரம் மாவட்டம்

 

நமது தாத்தா முத்துராமலிங்கத்தேவர் திருநாளையொட்டி,
நாம் தமிழர் கட்சி சார்பாக
வருகின்ற ஐப்பசி 13ஆம் நாள் 30-10-2025 காலை
10 மணியளவில் இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் சிற்றூரில் உள்ள தாத்தாவின் நினைவிடத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கிறது.

இந்நிகழ்வில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி