நாம் தமிழர் கட்சி – பாபநாசம் சட்டமன்றத் தொகுதி அய்யம்பேட்டை மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி அ.தயா (எ) தயாநிதி அவர்களின் தாயார் மேரி அம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
பெற்றெடுத்த தாயை இழந்து வாடும் அன்புத்தம்பி தயா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, பெருந்துயரில் பங்கெடுக்கின்றேன்.
அம்மா மேரி அம்மாள் அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்!




