தமிழ்த்தேசிய போராளி வா. கடல் தீபன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!

43

நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்காகவும், வெற்றிக்காகவும் அயராது பாடுபட்ட முதன்மைத்தளபதி!

அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு சிறை சென்றபோதும் துளியும் அஞ்சாது துணிவோடு நின்ற களப்போராளி!

தமிழ்த்தேசியம் எனும் விடுதலைக் கருத்தியலைத் தோளில் சுமந்து, மேடையில் முழங்கி, களத்தில் உழைத்து நெஞ்சமெல்லாம் நிறைந்து இருக்கிற என்னுடைய ஆருயிர் இளவல்!

என் அன்புத்தம்பி வா.கடல்தீபன் அவர்களது நான்காமாண்டு நினைவு நாளில், அவனின் கனவான தமிழ்த்தேசிய அரசியலை அரியணையேற்ற ஒற்றுமையுடன் பாடுபடுவோம்.

– செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி

Exit mobile version