மூத்த பத்திரிக்கையாளரும், தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளரும், இராவணா வலையொளி ஊடகவியலாளருமான ஐயா பா.ஏகலைவன் அவர்களின் தாயார் பா.அன்னப்பூரணி அவர்கள் மறைவெய்தியதையடுத்து, திருவண்ணாமலை மாவட்டம், கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி வேட்டவலத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இறுதிவணக்க நிகழ்வில், 31-07-2025 அன்று நேரில் சென்று மலர் வணக்கம் செலுத்தி, அம்மாவை இழந்து வாடும் ஐயா ஏகலைவன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுத்தேன்.







