நாம் தமிழர் கட்சி – போளுர் சட்டமன்றத் தொகுதி, இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி விஜயகுமார் அவர்களின் தாயார் மணியம்மாள் அவர்கள்
மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும்,
மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
பாசத்திற்குரிய தாயை இழந்துவாடும் அன்புத்தம்பி விஜயகுமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, பெருந்துயரில் பங்கெடுக்கின்றேன்.
அம்மா மணியம்மாள் அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்!




