நாம் தமிழர் கட்சி – திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் மாவட்டத் தலைவர் அன்புத்தம்பி மணிகண்டன் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா பரமசிவம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா பரமசிவம் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




