தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பேரன்பையும், பெரும் நம்பிக்கையையும் பெற்ற பெருந்தகை!
விடுதலைப்புலிகளுக்காக தமிழகத்தில் துணிந்து வழக்காடிய சட்டத்தரணி!
இன விடுதலைக்களத்தில் முன்னோடியாகவும், முன்னத்திஏராகவும் நின்று எங்களை வழிநடத்திய பெருமகன்!
வாழ்வின் எல்லா நிலைகளிலும் எனக்கு எல்லாமுமாக இருந்த என்னுயிர் அண்ணன்!
நாம் தமிழர் கட்சியின் மேனாள் பொதுச்செயலாளர்!
பேரன்பிற்கினிய மூத்தவர் சட்டத்தரணி நா.சந்திரசேகரன் அவர்களின் பிறந்தநாளில், அவர் தனது வாழ்நாளின் இறுதிமூச்சுவரை உயிரென சுமந்த இன விடுதலை எனும் புனிதக்கனவை நிறைவேற்ற அவர் வழிவழியே வருகின்ற மானத்தமிழ்ப் பிள்ளைகள் நாம் அயராது உழைப்போம் என உறுதியேற்போம்!
நாம் தமிழர்!




