நாம் தமிழர் கட்சி – அரியலூர் சட்டமன்றத் தொகுதி, ஆலந்துறையார் கட்டளை ஊராட்சியைச் சேர்ந்த களச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி அ.ஆனந்த்ராஜ் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா இரா.அசோக்ராஜ் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர் அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பி அ.ஆனந்த்ராஜ் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா இரா.அசோக்ராஜ் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




