நாம் தமிழர் கட்சி – வீரத்தமிழர் முன்னணி்யின் திருவண்ணாமலை செங்கம் கட்சி மாவட்டச் செயலாளர், வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அன்புத்தம்பி கு.திருப்பதி அவர்களின் தாயார் அம்மா கு.அலமேலு அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் அன்புத்தம்பி கு.திருப்பதி அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா கு.அலமேலு அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



