நாம் தமிழர் கட்சி – கீழ்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதி கையூட்டு-ஊழல் ஒழிப்புப் பாசறைப் பொறுப்பாளர் அன்புத்தம்பி பெருமாள் அவர்களின் தந்தை ஐயா ம.நாராயணன் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அப்பாவை இழந்து வாடும் தம்பி பெருமாள் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா ம.நாராயணன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



