நாம் தமிழர் கட்சி – ஆவடி கிழக்கு மாநகர மகளிர் பாசறைப் பொறுப்பாளர் அம்மா அகிலா அவர்களின் தந்தை ஐயா சுப்பிரமணியன் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அப்பாவை இழந்து வாடும் அகிலா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா சுப்பிரமணியன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



