நாம் தமிழர் கட்சி – தென்காசி மாவட்ட வழக்கறிஞர் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி அ.ரா.சிவகுமார் அவர்களின் மனைவி ஜூலிமேசலின் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரமும் அடைந்தேன்.
சொற்களால் விவரிக்க இயலாப் பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் தம்பியை எவ்வாறு தேற்றுவது எனத் தெரியாது கலங்கி நிற்கிறேன்.
உயிர்த்துணையான மனைவியை இழந்து வாடும் தம்பிக்கும், குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தங்கை ஜூலி மேசலின் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.




