நாம் தமிழர் கட்சி – இராமநாதபுரம் மாவட்டச் சுற்றுச்சூழல் பாசறையின் செயலாளர் அன்புத்தம்பி அ.இராஜபாண்டியன் அவர்களின் தந்தையார் அப்பா அந்தோணி சேகர் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அப்பாவை இழந்து வாடும் தம்பி அ.இராஜபாண்டியன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா அந்தோணி சேகர் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




