நாம் தமிழர் கட்சி – போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி, சுபாஷ் நகரைச் சேர்ந்த ஓமன் செந்தமிழர் பாசறையின் ஆன்றோர் அவையத் தலைவர் அன்புத்தம்பி இராஜா அவர்களின் மாமனாரும், ஒமன் மகளிர் பாசறைச் செயலாளர் சகோதரி அனிதா அவர்களின் தந்தையுமான மதிப்பிற்குரிய ஐயா சன்னாசி பாண்டியன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து வருத்தமடைந்தேன்.
ஐயாவை இழந்து வாடும் தம்பி இராஜா, சகோதரி அனிதா ஆகியோருக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, அவர்களது துயரத்தில் நானும் முழுமையாகப் பங்கெடுக்கிறேன்.
ஐயா சன்னாசி பாண்டியன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




