முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – துறையூர் சட்டமன்றத் தொகுதி பாலகிருஷ்ணம்பட்டி…

0

நாம் தமிழர் கட்சி – துறையூர் சட்டமன்றத் தொகுதி பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சியின் தலைவர் ஐயா து.பாண்டியன் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக் கொண்டு, களப்பணியாற்றிவந்த ஐயா து.பாண்டியன் அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
ஐயா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா து.பாண்டியன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version