நாம் தமிழர் கட்சி – செங்கல்பட்டு, காட்டாங்குளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட நெடுங்குன்றம் ஊராட்சிப் பொறுப்பாளர் அன்புத் தம்பி ராஜ்குமார் அவர்களின் தாயார் அம்மா சரளா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பி ராஜ்குமார் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா சரளா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




