நாம் தமிழர் கட்சி – நீலகிரி மாவட்டம், கூடலூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த தொழிற்சங்கப் பேரவையின் மாவட்ட இணைச் செயலாளர் அன்புத்தம்பி இளங்கோவன் அவர்களின் அன்புமகன் இ.முத்தையா அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
பாசமிகு அன்பு மகனை இழந்து வாடும் தம்பி இளங்கோவன் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி இ.முத்தையா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




