நாம் தமிழர் கட்சி – சேலம் மாவட்டம், வீரபாண்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வேம்படிதாளம் ஊராட்சிப் பொறுப்பாளர் தம்பி திருக்குமரன் அவர்களின் அப்பா வெங்கட்ராமன் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அப்பாவை இழந்து வாடும் தம்பி திருக்குமரன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா வெங்கட்ராமன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்!




