நாம் தமிழர் கட்சி – திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டையைச் சேர்ந்த மகளிர் பாசறைப் பொறுப்பாளர் அன்புத்தங்கை சிவகாமி ஜோதிவிநாயகம் அவர்களின் தாயார் ந.ஜெயா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அன்னையை இழந்து வாடும் தங்கை சிவகாமி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா ஜெயா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




