முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதிக்குட்பட்ட…

0

நாம் தமிழர் கட்சி – இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதிக்குட்பட்ட காரங்காடு பகுதியைச் சேர்ந்த அன்புத்தம்பி அ.இனிகோ அவர்கள் உயிரிழந்தார் எனும் துயரச்செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.

மண்ணையும் மக்களையும் காப்பாற்றும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக் கொண்டு, துடிப்புடன் களப்பணியாற்றிவந்த தம்பியை இழந்திருப்பது பெருந்துயரத்தைத் தருகிறது.

தம்பியை இழந்து வாடுகின்ற அவர்தம் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், எமது நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அன்புத்தம்பி இனிகோ அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

Exit mobile version