நாம் தமிழர் கட்சி – வேதாரண்யம் தொகுதியின் தகவல் தொழில்நுட்பப் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி வாய்மேடு சிவக்குமார் அவர்களது தாயார் அம்மா க.புஷ்பலதா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரமும் அடைந்தேன்.
பெற்று வளர்த்து பேணிக்காத்த அம்மாவை இழந்து வாடும் தம்பி சிவக்குமார் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா புஷ்பலதா அவர்ளுக்கு எனது கண்ணீர் வணக்கம்!




