திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த, நாம் தமிழர் கட்சியின் 300 மங்கலம் ஊராட்சிச் செயலாளர் அன்புத்தம்பி மோகன் அவர்களின் தந்தையார் மதிப்பிற்குரிய ஐயா பாலு அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
பேரன்புகொண்டு நேசித்த தந்தையை இழந்து வாடும் அன்புத்தம்பி மோகன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா பாலு அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!




