கடந்த 2009ஆம் ஆண்டு ஈழத்தில் நடைபெற்ற தமிழினப் படுகொலைக்குப் பிறகான காலகட்டத்தில் தமிழர் என்கின்ற தன்மான உணர்ச்சி தமிழ்நாட்டில் எழுச்சிபெற்று வருகிறது. தமிழின இளையோர் தன் மொழி காக்க, தன் நிலம் காக்க, ‘நாம் தமிழர்’ என அணி வகுக்கின்ற காலம் உருவாகி இருக்கிறது. மொழிப்போர் ஈகிகளது வரலாற்றை உலகெங்கும் கொண்டுபோய் சேர்க்க வேண்டியது தமிழர்கள் ஒவ்வொருவரது தார்மீகக்கடமை என்பதை உணர வேண்டியது அவசியமாகிறது. மொழி வாழ்ந்தால்தான் இனம் வாழும்; இன உணர்வு இருந்தால்தான் நாம் நம் நிலத்தில் வாழ முடியும் என்கின்ற புரிதலும், பொறுப்புணர்வும், வரலாற்று அறிதலும் தமிழருக்கு ஏற்படவேண்டும். அதற்கு இந்நாளில் ஒவ்வொரு தமிழரும் உளப்பூர்வமாக உறுதியேற்க வேண்டும்.
எந்தத் தன்னலமும் இல்லாமல், தன் வாழ்வு பாராமல், நம் மொழி காக்க தன்னுயிரை தந்த மான மறவர்களான மொழிப்போர் ஈகிகளை ஒவ்வொரு தமிழரும் நினைவில் சுமந்து, அவர்கள் எந்த கனவிற்காகத் தன்னுயிரை தந்தார்களோ, அந்தக் கனவை நிறைவேற்ற உழைப்பேனேன உறுதி ஏற்க வேண்டுமென உலகமெங்கும் வாழும் தமிழ்ச்சொந்தங்களுக்குப் பேரழைப்பு விடுக்கிறேன்!
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
(2/2)


