போதும் மனிதர்களே
பூட்டுப் போட்டுப்
பூட்டுப் போட்டுப்
புலன்களே பூட்டாயின
திறந்து விடுங்கள்!
வாழப்படாத வாழ்க்கை
பாக்கி உள்ளது
உங்கள் வீட்டுக்கு
விண்ணிலிருந்து வரும்
விருந்தாளியல்லவா மழை?
வாருங்கள்
மழையை
நம் வீட்டுத்
தேநீருக்கழைப்போம்!
– கவிப்பேரரசு வைரமுத்து https://x.com/Seeman4TN/status/1731456026363437148/video/1



