நாம் தமிழர் கட்சியின் தூத்துக்குடி பொறுப்பாளர் அன்புத்தம்பி ஜோ.ஆனந்த் அவர்களின் அன்புத்தம்பி ஜோ.செல்வம் அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன்.
அன்புத்தம்பியை இழந்து வாடும் தம்பி ஆனந்த் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி செல்வம் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி



