திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தொகுதிக்குட்பட்ட சேத்பட் மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த, நாம் தமிழர் கட்சியின் நம்பேடு ஊராட்சிப் பொறுப்பாளர் அன்புத்தம்பி மணிகண்டன் அவர்களின் தாயார் இலட்சுமி அம்மாள் அவர்கள் மறைவுற்ற துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.
பேரன்புமிக்க அன்னையை இழந்து வாடும் அன்புத்தம்பி மணிகண்டன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.
அம்மா இலட்சுமி அம்மாள் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி



