முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சம வேலைக்கு சம ஊதியம் வேண்டி சென்னை, பள்ளிக்கல்வித் துறை…

0

சம வேலைக்கு சம ஊதியம் வேண்டி சென்னை, பள்ளிக்கல்வித் துறை வளாகத்தில் 5வது நாளாக தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசுப்பள்ளி இடைநிலை ஆசிரியப் பெருமக்களை நேரில் சந்தித்து, போராட்டத்திற்கு ஆதரவளித்து அவர்களின் கோரிக்கையைக் கேட்டறிந்தேன்.
(1/4) @Anbil_Mahesh

ஆசிரியர்களின் கோரிக்கை மிகமிக நியாயமானது. வருங்காலத் தலைமுறையினருக்கு கல்வியையும், நல்லொழுக்கத்தையும் போதித்து நல்லதொரு குடிமக்களாக நாட்டிற்கு உருவாக்கித் தரும் போற்றுதற்குரிய ஆசிரியப் பெருமக்களை உரிமைகேட்டு வீதியில் இறங்கிப்போராடச் செய்திருப்பது மிகுந்த மனவேதனையளிக்கிறது.

(2/4)

ஆசிரியப் பெருமக்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்து மாணவர்களின் கல்வி எவ்விதத்திலும் பாதிக்கப்படாமல் காத்திட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

(4/4)

ஆசிரியர்களின் இப்போராட்டத்தால் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வியும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது

ஆகவே, மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்புத்தம்பி அன்பில் மகேஷ் பொய்யாமொழி (@Anbil_Mahesh) அவர்கள் உடனடியாக போராடும் ஆசிரியர் பெருமக்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றி

(3/4)

Exit mobile version