முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தஞ்சாவூர் அருகே  களிமேடு கிராமத்தில் நேற்று பின்னிரவில் நடைபெற்ற தேர்த் திருவிழாவின்போது,…

3

தஞ்சாவூர் அருகே  களிமேடு கிராமத்தில் நேற்று பின்னிரவில் நடைபெற்ற தேர்த் திருவிழாவின்போது, எதிர்பாராத விதமாக, உயர் அழுத்த மின்கம்பியில் தேர் உரசியதில் மின்சாரம் பாய்ந்து 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்து, மேலும் 4 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள

(1/3)

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டுமெனவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 இலட்சம் ரூபாய் துயர் துடைப்பு உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசினை கேட்டுக்கொள்கிறேன். (3/3)

செய்தியறிந்த பேரதிர்ச்சியும் பெருந்துயரும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், ஈடு செய்யவியலாப் பேரிழப்பினால்  துயரிருளில்  மூழ்கியுள்ள கிராமத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து அவர்களது இப்பெருந்துயரத்தை பகிர்ந்து கொள்கிறேன். (2/3)

Exit mobile version