மருது மக்கள் இயக்கத் தலைவர் எனதன்பு இளவல் முத்துப்பாண்டி அவர்களின் தந்தையார் அப்பா வெ.செண்பகம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயருமடைந்தேன். அப்பாவை இழந்து வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

என் தோளுக்கு தோளாக துணைநிற்கும் எனதன்பு தம்பிக்கு அனைத்துமாக இருந்து அவரை வழிநடத்திய அப்பாவின் திடீர் மறைவு எப்பேர்ப்பட்ட இழப்பு என்பதை நன்கறிவேன். ஆற்றமுடியாப் பேரிழப்பில் சிக்கித்தவிக்கும் தம்பி இத்துயரிலிருந்து மீண்டுவர பக்கபலமாக துணைநிற்கிறேன்
அப்பாவுக்கு எனது கண்ணீர்வணக்கம்!



