நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தபோதும் கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காக்கும் உயரிய நோக்கத்திற்காக விடுப்பு எடுக்காது அர்ப்பணித்து பணியாற்றி, தொற்றுக்குள்ளாகி உயிர்துறந்த மதுரை அனுப்பானடி ஆரம்ப சுகாதாரத்துறை மருத்துவர் தங்கை சண்முகப்பிரியாவின் ஈகத்தை எண்ணி மெய்ச்சிலிர்க்கிறேன்.

தன்னலம் என்பது துளியுமில்லாது மகத்தான மக்கள் சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு நோய்த்தொற்றால் களப்பலியான தங்கை சண்முகப்பிரியாவின் மறைவு ஈடுசெய்ய முடியாப் பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் ஆறுதல் சொல்ல இயலாது கலங்கித் தவிக்கிறேன். (2/2)


