டெல்டாவின் கல்வி தந்தை எனப் போற்றப்படுகிற வகையில் வாழ்ந்திட்டப் பெருந்தகை ஐயா துளசி வாண்டையார் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரும்அதிர்ச்சியும், ஆழ்ந்த மனக்கவலையும் அடைந்தேன். ஐயாவை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.




