கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நடிகரும், ஓவியருமான அண்ணன் பாண்டு அவர்கள் சிகிச்சைப்பயனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன்.

தன்னுடையத் தனித்துவமான நகைச்சுவை நடிப்பாலும், உடல்மொழியாலும், முகப்பாவனைகளாலும் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்து, தவிர்க்க இயலா திரைக்கலைஞராகப் புகழ்பெற்று விளங்கிய அண்ணன் பாண்டு அவர்களது மறைவு தமிழ்த்திரையுலகுக்கு ஏற்பட்டப் பேரிழப்பாகும்.
(2/2)



