எனது அன்புக்குரிய மாமா தவசி அவர்கள் நோய்வாய்ப்பட்டு மறைவுற்றார் எனும் செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழ்த்திரைத்துறையினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
(1/2)

மதுரை வட்டார மொழியில் மண்ணின் மணம் கமழ எல்லோரோடும் இனிமையாகப் பேசிப் பழகும் மாமா தவசி அவர்கள் தனது அசாத்திய நடிப்பாற்றல் மூலம் மக்கள் மனங்களில் இடம்பிடித்தவராவர். அவரது திடீர் மறைவுச்செய்தி இதயத்தைக் கனக்கச் செய்கிறது.
மாமாவுக்கு எனது கண்ணீர் வணக்கம்!



