தலைமை அறிவிப்பு – வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் வீரப்புகழ் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் (இடம் மாற்றம்)

7

க.எண்: 2025121024
நாள்: 18.12.2025

அறிவிப்பு: (இடம் மாற்றம்)
வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்ட வீரப்பேரரசி!
நம் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக, வருகின்ற மார்கழி 09ஆம் நாள் (24-12-2025) மாலை 04 மணியளவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் வீரப்புகழ் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் செய்துங்கநல்லூரில் பேரெழுச்சியாக நடைபெறவிருக்கிறது.
வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் வீரப்புகழ் போற்றுவோம்!
மாபெரும் பொதுக்கூட்டம்
தலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி நாள்: மார்கழி 09 | 24-12-2025 மாலை 04 மணியளவில்
இடம்: செய்துங்கநல்லூர் (திருவைகுண்டம்) தூத்துக்குடி மாவட்டம்
இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி