க.எண்: 2025110977
நாள்: 17.11.2025
எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக்கூட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 23-11-2025 காலை 11 மணியளவில் வில்லியனூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோபால்சாமி நாயக்கர் திருமண மகால் அரங்கில் நடைபெறவிருக்கிறது.
ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலக்
கலந்தாய்வுக் கூட்டம்
தலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி
நாள்: கார்த்திகை 07 | 23-11-2025 காலை 11 மணியளவில்
இடம்: கோபால்சாமி நாயக்கர் திருமண மகால் வில்லியனூர் தேசிய நெடுஞ்சாலை
இக்கலந்தாய்வுக்கூட்டத்தில் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட மற்றும் கிளைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். -தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்



