தலைமை அறிவிப்பு – செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்துப் பாசறைகளின் மாநிலப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்

14

க.எண்: 2025100914

நாள்: 09.10.2025

முக்கிய அறிவிப்பு:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், ஐப்பசி 01ஆம் நாள் 18-10-2025
மாலை 04 மணியளவில் சேலம் மேட்டூர் அணை சதுரங்காடி அருகில் நடைபெறவிருக்கும் வீரப்பெரும்பாட்டன் தீரனும் அவன் பேரனும் மாபெரும் பொதுக்கூட்டம் ஏற்பாடுகள் மற்றும் களப்பணிகளைத் திட்டமிடுதல் பொருட்டு, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்துப் பாசறைகளின் மாநிலப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம், மாநில ஒருங்கிணைப்பாளர்களின் முன்னிலையில் புரட்டாசி 26ஆம் நாள் 12-10-2025 காலை 09:30 மணியளவில் சேலம் மாவட்டம். மேட்டூர் அணை, பி.ஆர்.எஸ் டிரான்ஸ்போர்ட் எதிரில், பிஎஸ்என்எல் அருகில், தொழிற்பேட்டை, மேட்டூர் ஆர்.எஸ் நடைபெறவிருக்கிறது.

 

இக்கலந்தாய்வுக்கூட்டத்தில் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்துப் பாசறைகளின் மாநில மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி