க.எண்: 2025090793
நாள்: 29.09.2025
அறிவிப்பு:
எழுத்தறிவித்த இறைவன்
தாத்தா புகழுரை: செந்தமிழன் சீமான் இடம்: பத்திரகாளி அம்மன் கோவில் அருகில் நாள்: புரட்டாசி 16 | 02-10-2025 |
எழுத்தறிவித்த இறைவன் தாத்தா பெருந்தலைவர் காமராசர் அவர்களின் நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற புரட்டாசி 16ஆம் நாள் 02-10-2025 மாலை 05 மணியளவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் சிவகாசி, பாவடி தோப்பு, பத்திரகாளியம்மன் கோவில் அருகில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.
இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி