தலைமை அறிவிப்பு – சமூகநீதிப் போராளி இம்மானுவேல் சேகரனார் நினைவிடத்தில் மலர்வணக்கம்

45

க.எண்: 2025080751

நாள்: 28.09.2024

அறிவிப்பு:

சமூகநீதிப் போராளி
இம்மானுவேல் சேகரனார்
நினைவிடத்தில் மலர்வணக்கம்தலைமை:

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாள்:
11-09-2025 காலை 11 மணியளவில்

நிகழ்விடம்:
பரமக்குடி (சந்தை கடை அருகில்)
இராமநாதபுரம் மாவட்டம்

 

சமூகநீதிப் போராளி பெருந்தமிழர் நமது தாத்தா இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 68ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அமைந்துள்ள தாத்தாவின் நினைவிடத்தில் நடைபெறவிருக்கும் நினைவுநாள் பெருநிகழ்வில்,
நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள்
11-09-2025 காலை 11 மணியளவில் பங்கேற்று மலர்வணக்கம் செலுத்தவிருக்கிறார்.

இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி