தலைமை அறிவிப்பு – ‘உரையாடுவோம் வாருங்கள்’ கிறித்தவர்களுடன் உரையாடல் கேள்விகளுக்குப் பதிலளித்து கருத்துரை: செந்தமிழன் சீமான்

34

க.எண்: 2025080740

நாள்: 25.08.2025

அறிவிப்பு:

உலகத் தமிழ்க் கிறித்துவர் இயக்கம் நடத்தும்

‘உரையாடுவோம் வாருங்கள்’
கிறித்தவர்களுடன் உரையாடல்

கேள்விகளுக்குப் பதிலளித்து கருத்துரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி

நாள்:
ஆவணி 11 | 27-08-2025
மாலை 05 மணிமுதல் இரவு 08 மணிவரை

இடம்:
சுமங்கலி திருமண மண்டபம்
அருண் உண்டுறை விடுதி (HOTEL ARUN)
திருச்சி தொடர்வண்டி நிலையம் அருகில்

 

உலகத் தமிழ்க் கிறித்துவர் இயக்கம் சார்பாக ஆவணி 11ஆம் நாள் 27-08-2025 மாலை 05 மணிமுதல் இரவு 08 மணிவரை திருச்சி தொடர்வண்டி நிலையம் அருகில் உள்ள சுமங்கலி திருமண மண்டபத்தில் நடைபெறவிருக்கும் ‘உரையாடுவோம் வாருங்கள்’ என்ற தலைப்பில் “கிறித்தவர்களுடன் உரையாடல்” நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கிறித்துவ உறவுகளின் அரசியல் கேள்விகளுக்குப் பதிலளித்து கருத்துரையாற்றவிருக்கிறார்.

இம்மாபெரும் கருத்தரங்கத்தில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும்,
நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி