தலைமை அறிவிப்பு – இந்திய தேசிய லீக் கட்சி நடத்தும் எது நமக்கான அரசியல்? மாபெரும் கருத்தரங்கம் கேள்விகளுக்குப் பதிலளித்து கருத்துரை: செந்தமிழன் சீமான்

32

க.எண்: 2025080713

நாள்: 10.08.2025

அறிவிப்பு:

இந்திய தேசிய லீக் கட்சி நடத்தும்

எது நமக்கான அரசியல்?
மாபெரும் கருத்தரங்கம்

கேள்விகளுக்குப் பதிலளித்து கருத்துரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி

நாள்: ஆடி 26 | 11-08-2025 மாலை 03 மணியளவில்

இடம்: கவிக்கோ மன்றம்
சென்னை – மைலாப்பூர் (சி.ஐ.டி. குடியிருப்புப் பகுதி)

 

இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக ஆடி 26ஆம் நாள் 11-08-2025 மாலை 03 மணியளவில் சென்னை மைலாப்பூர் சி.ஐ.டி. குடியிருப்புப் பகுதியில் உள்ள கவிக்கோ மன்றத்தில் ‘எது நமக்கான அரசியல்?’ என்ற தலைப்பில் மாபெரும் கருத்தரங்கம் நடைபெறவிருக்கிறது. இதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, உறவுகளின் அரசியல் கேள்விகளுக்குப் பதிலளித்து கருத்துரையாற்றவிருக்கிறார்.

இம்மாபெரும் கருத்தரங்கத்தில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு


கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி