முகப்பு அறிவிப்புகள் எதிர்வரும் நிகழ்வுகள்

தலைமை அறிவிப்பு – (நாள் மாற்றம்) தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் நடத்தும் கள் விடுதலை மாநாடு

91

க.எண்: 2025070683அ

நாள்: 25.07.2025

அறிவிப்பு:

(நாள் மாற்றம்)

தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் நடத்தும்

கள் விடுதலை மாநாடு
செந்தமிழன் சீமானுடன்
1000 பனையேறிகள்

நாள்:
ஆடி 14 | 30-07-2025 காலை 10 மணியளவில்

இடம்:
சக்திநகர் பனந்தோப்பு
சமயபுரம் (திருச்சிராப்பள்ளி மாவட்டம்)

 

தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில், திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம், சக்திநகர் பனந்தோப்பில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களுடன் 1000 பனையேறிகள் அணிவகுக்கும் மாபெரும் கள் விடுதலை மாநாடு ஆடி 11ஆம் நாள் 27-07-2025 அன்று நடைபெறவிருந்தநிலையில் நாள் மாற்றம் செய்யப்பட்டு ஆடி 14ஆம் நாள் (30.07.2025) அன்று காலை 10 மணியளவில் நடைபெறவிருக்கிறது.

இம்மாநாட்டில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு


கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version