நாம் தமிழர் கட்சி – காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புள்ளலூர் கிராமத்தைச் சேர்ந்த வாலாஜாபாத் வடக்கு ஒன்றியத் தலைவர் அன்புத்தம்பி பொ.ஜீவரத்தினம் அவர்களுடைய தந்தையார் மதிப்பிற்குரிய ஐயா ஆ.பொன்னுசாமி அவர்கள் மறைவெய்திய துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஐயா பொன்னுசாமி அவர்களை இழந்து வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும்,நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா பொன்னுசாமி அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!




