முகப்பு கட்சி செய்திகள்

சோழவந்தான் தொகுதி வீரவணக்க நிகழ்வு

70

புரட்சிகரபாக்களால் சுதந்திர வேட்கையை நம் மக்களிடம் தட்டி எழுப்பிய நமது பாட்டன் பாரதியார் அவர்களின் 101ம் ஆண்டு நினைவுநாளையொட்டியும் சமூகநீதி போராளி இம்மானுவேல் சேகரனாரின் 65ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டியும் நினைவேந்தல் நிகழ்வு
சோழவந்தான் தொகுதி சார்பாக அலங்காநல்லூர் பேரூராட்சியில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வை சுற்றுச்சூழல் பாசறை தொகுதி செயலாளர் வீணு தலைமை ஏற்றார். தொகுதி தலைவர் சங்கிலி முருகன் மற்றும் செயலாளர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து செப்டம்பர் மாதத்திற்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

 

Exit mobile version