தென்காசி மாவட்டம் விலை உயர்வு கண்டன ஆர்ப்பாட்டம்

48

எரிபொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கடும் விலை உயர்வு, கனிம வளக்கொள்ளை ஆகியவற்றை கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகரங்களில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக  காலை 11 மணியளவில் தென்காசி மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே அருண்சங்கர் தென்காசி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் தலைமையில் சி. ச. மதிவாணன் மாநில ஒருங்கிணைப்பாளர் சிறப்புரையில், பசும்பொன் மாநில கொள்கை பரப்பு செயலாளர் கண்டன உரையில் நடைபெற்றது. இம்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் தொகுதிகளின் பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
9655595678

 

Exit mobile version